இலங்கை மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சி!

மருத்துவ வரலாற்றில் முதன் முறையான சிறுநீரகத்தில் காணப்பட்ட கல் ஒன்று லேசர் சிகிச்சையின் வாயிலாக அகற்றப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழாம் இன்று இந்த சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

களுத்துறை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் கலண பரணபள்ளியகுருகே உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் பங்களிப்புடன் குறித்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

52 வயதுடைய களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்வாறு லேசர் சத்திர சிகிச்சை வாயிலாக வலது சிறுநீரகத்தில் காணப்படட கல் அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையின் மூலம் 4 சென்றிமீற்றர் நீளமுடைய கல் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *