60 பொலிஸாருக்கு கொரோனா 300 பேர் தனிமைப்படுத்தலில்!
இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் இதுவரை 60 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், 300 பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.