தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்!
மேல் மாகாணத்தில் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படவுள்ளதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் விமானப் படை தளபதி ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.