கொழும்பு துறைமுக ஊழியர்கள் 37 பேருக்கு கொரோனா!
கொழும்பு துறைமுகத்தின் கப்பல்துறை பகுதி (Colombo Port dockyard) மற்றும் கொழும்பு துறைமுகத்தின் 37 ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 36 பேர் கப்பல் கட்டும் தொழிலாளர்கள், துறைமுக பொறியியல் பிரிவின் Steel Processing பதப்படுத்தும் பிரிவின் ஊழியர்கள்.
சுமார் 100 தொழிலாளர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், துறைமுக வளாகத்தில் சரியான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்று துறைமுக சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் லால் பெங்கமுவா தெரிவித்தார்.
துறைமுகத் தொழிலாளர்கள் கைகளைக் கழுவ நீண்ட வரிசையில் நிற்கவேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.