இந்திய பிரபல சினிமா நடிகருக்கு கொரோனா!

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெற்ற ஜனகனமன மலையாளப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது கொரோனா தொற்று உறுதியானதாக நடிகர் பிரித்விராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தன்னைத்தானே பிரித்விராஜ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். படத்தின் இயக்குநரான டிஜோ ஜோஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜனகனமண படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *