கரு ஜெயசூரிய தலைமையில் புதிய கூட்டணி உதயமாகிறது!
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் சிலரும் கருவின் கட்சியில் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை தனக்கு வழங்குமாறு கருஜயசூரிய கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், அதனை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். இந்நிலையிலேயே முக்கிய அரசியல் புள்ளிகள், நிபுணர்கள் உள்ளடங்களாக புதிய கட்சியை கருஜயசூரிய ஆரம்பிக்கவுள்ளார் என தெரியவருகின்றது