பதவியிலிருந்து விலகினார் விக்னேஸ்வரன்!
தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியிலிருந்து சி.வி.விக்கினேஸ்வரன் விலகியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையை ஒரு வெகுஜன அமைப்பாகவும், பரந்துபட்ட அமைப்பாகவும் ஆக்கும் நோக்கத்துடன், தமிழ் மக்கள் தேசியத் தலைவர் விக்கினேஸ்வரன், பேரவையின் இணைத்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையை மீளவும் வலுப்படுத்தவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை உள்ளெடுக்கவுமே இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. விக்கினேஸ்வரன் மட்டுமல்லாமல் கடந்த தேர்தலில் வேறொரு கட்சியில் நின்று வாக்கு கேட்ட மற்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக கூறப்படுகிறது