அரசாங்கம் மக்களின் பிடிக்குள் இருந்து தப்பமுடியாது ரணில் எச்சரிக்கை!
“மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் உள்ளது என்பதற்காக அரசாங்கம் ஜனநாயகத்தை சவாலுக்குட்படுத்தமுடியாது. இருந்தாலும் ’20’ ஊடாக அதனை செய்துள்ளனர். இது தொடர்பில் தற்போது மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே, மக்களின் பிடிக்குள் இருந்து அரசாங்கம் தப்பமுடியாது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி செயற்பாட்டாளர்களுடன் சிறிகொத்தவில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.