லெபனான் குண்டு வெடிப்பு இலங்கை தூதரகத்திற்கும் சேதம்!
லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் குறித்த தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என லெபனானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.