இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து வருகை தந்த ஒருவரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலிருந்து வருகை தந்த 3 பேரும், இந்தியாவில் இருந்து வருகை தந்த 9 பேருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து இன்று மாத்திரம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 296 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,450 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,980 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று நோயாளர்களில் 459 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 37 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *