தேர்த்தலையொட்டி 20 ஆயிரம் புலனாய்வு பிரிவினர் களத்தில்!
இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி புலனாய்வு பிரிவினர் 20 ஆயிரம் பேர் களத்தில் இறக்கப்படவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் நிறுத்தப்படவுள்ளனர்.வாக்கெடுப்பு தினத்தன்று வாக்காளர்கள் சுகாதார விதிமுறைகளை சரிவர பின்பற்றுகிறார்களா என்று சோதிப்பதற்காகவே இவர்கள் இவ்வாறு களமிறக்கப்படவுள்ளனர்.
ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சிடம் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு.