இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகள்
நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1,530 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கொரோனா தடுப்பு மையங்களில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைபெற்று வருபவர்களில் 745 பேர் குணமடைந்துள்ளனர்.
775 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 10 பேர் உயிரிழந்துள்ளனர்