சஜித் அணியிலுள்ள 30 பேர் மீண்டும் ரணில் அணியில்?
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள முன்னாள் எம்.பிக்கள் 30 பேர் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வரவுள்ளனர் – என்று ரணில் ஆதரவு அணி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி பக்கம்சென்ற முன்னாள் எம்.பிக்களுள் சுமார் 30 பேர்வரை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர். இது குறித்து எம்முடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட ரீதியிலும் என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். உரிய நேரத்தில் அவர்கள் எம்முடன் இணைவார்கள்.” – என்றும் கூறினார்.
அத்துடன் தேர்தலை நடத்துவதற்கும் நாம் எதிரானவர்கள் அல்லர்.
ஆனால், சுகாதார தரப்பினர் பரிந்துரைந்த பின்னர், பாதுகாப்பான சூழலில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.