ஜூன் மாதம் முதலாம் திகதி பாடசாலைகளை திறப்பதாக தீர்மானம் எடுக்கப்படவில்லை

ஜூன் மாதம் முதலாம் திகதி பாடசாலைகளை திறப்பதாக தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீள திறக்கும் திகதி மற்றும் பாடசாலைகளை மீள திறப்பதற்கான நடைமுறைகள் குறித்து சுகாதார பிரிவு வழங்கும் ஆலோசனைக்கமைய தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *