பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் நடிகர் பிரசாந்த்
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு என்றும் தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ஜானி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகளைப் பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.
அதன்பின் நடிகர் பிரசாந்த் தெலுங்கில் விக்ரம் வினைய ராமா என்ற படத்தில் துணை நடிகராக நடத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .அது மட்டுமில்லாமல் ஒரு காலத்தில் தல-தளபதி சவாலாக இருந்த பிரசாத்துக்கு இப்படி ஒரு நிலைமை என்று ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.
தற்போது நடிகர் பிரசாந்த் மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கட்டாயம் நடிகர் பிரசாந்த் பற்றி ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்.