‘வெடிங் சோ – 2020’

திருமண நிகழ்வுகளின் வெளிப்பாட்டை மேன்மையாக்கும் வண்ணம் திருமணபந்தத்தில் இணைவோரின் எதிர்கால சந்தோஷ உல்லாசங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெப்ரவரி 14,15,16 ஆம் திகதிகளில் கொழும்புபண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘வெடிங் சோ – 2020’ கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வின் உள்ளடக்கங்கள், அவற்றின் வினைத் திறன்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஊடக சந்திப்பு நேற்று (03) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் திருமண நிகழ்வுகளின் அலங்காரங்கள், புகைப்பட வர்ணனைகள், விடியோ அமைப்புக்கள் என அத்தனையும் வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்கள் சிலவற்றின் பணிப்பாளர்கள் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *