மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறந்தார் மைத்திரி!
இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டில்லி சென்றுள்ளார்.
இன்று காலை 8.20 மணியளவில் இந்திய விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ.282 விமானத்தில் டில்லி நோக்கிப் பயணமானார்.
ஜனாதிபதியுடன் மேலும் 12 பேர் டில்லி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.