பொல்லால் தாக்கி பிக்கு படுகொலை! – காலியில் கொடூரம்

காலியில் பௌத்த பிக்கு ஒருவர் பொல்லால் தாக்கிக் கொலைசெய்யப்பட்ட கொடூர சம்பவம் இடம்பெறுள்ளது.

காலி – மாபலகம, எதுமலே வித்யாதிலக்க பிரிவெனா விகாரையில் தங்கியிருந்த, 75 வயதுடைய குணசிறி தேரர், விகாரை வளாகத்தில் வைத்து இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், நேற்றிரவு (30) இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தேரரைப் பொல்லால் தாக்கிக் கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில், விகாரையில் தங்கியிருந்த ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *