ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத்தின் பதவிகளை உடன் பறித்தெடுங்கள்! – மைத்திரியிடம் கோரிக்கை

“நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதற்குத் துணைபோன அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி ஆகியோரைப் பதவிகளில் இருந்து உடன் நீக்குங்கள்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளது பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம்.

இந்தக் கடிதம் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் குறித்த ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *