O/L பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியீடு!
ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன எனவும் அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.