ஜே.வி.பியின் யோசனைக்கு திகா கடும் எதிர்ப்பு!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
” ஜனாதிபதி முறைமை நீடிக்கவேண்டும். அது சிறுபானமையின மக்களுக்கு அனுகூலமாக அமைந்துள்ளது. எனவே, குறித்த யோசனை கைவிடப்படவேண்டும்.” என திகா வலியுறுத்தினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரும் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஜே.வி.பி. தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இதற்கு ஐக்கிய தேசியக்கட்சி பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், நாளை மறுதினம் (06) எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவை நேரில் சந்தித்து ஆதரவு கோரவுள்ளது ஜே.வி.பி.
’20’ இற்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன போர்க்கொடி தூக்கியுள்ளது. அமைச்சர் மனோ கணேசனும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட், சம்பிக்க ஆகியோரும் ஆதரவு வழங்கமாட்டார்கள் எனவும் மனோ கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே அமைச்சர் திகாம்பரமும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.