காதலித்த குற்றத்துக்காகப் பெற்ற மகளை அடித்துப் படுகொலைசெய்த கொடூர தாய்! – அதிர்ச்சியில் தந்தை தற்கொலை

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரம். அவர் கூலித் தொழிலாளி. அவரின் மனைவி பெயர் நல்லம்மா.

தனியார் கல்லூரியில் கல்வி கற்று வரும் இவர்களுடைய ஒரேயொரு மகள் காயத்திரி, தனது வகுப்பு நண்பனான சதீஷை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார்.

இதற்கு காயத்திரியின் தாயார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். தனியார் கல்விக்கு மகளைச் செல்லவிடாது வீட்டில் தடுத்துவைத்தார்.

இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறத் திட்டமிட்ட காயத்திரி, தொலைபேசியில் சதீஷுக்கு தகவல் அளித்தார். தன்னை அழைத்து செல்ல வருமாறு சதீஷிடம் காயத்திரி கேட்டார்.

இந்தத் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட காயத்திரியின் தாயாரான நல்லம்மா, மகளை உடனே வீட்டின் சமயலறைக்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த பலகையொன்றால் கண்டபடி அடித்துத் துன்புறுத்தினார்.

தலையில் பலத்த காயங்களுக்குள்ளான காயத்திரி மயக்கமுற்று இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இறுதியில் மூச்சடங்கி உயிரிழந்தார். அதையடுத்து அச்சத்தால் தொலைதூரத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு நல்லம்மா தப்பிச் சென்றார்.

கூலி வேலைக்குச் சென்றிருந்த காயத்திரியின் தந்தை சுந்தரம், மாலை 6 மணியளவில் வீட்டுக்கு வந்து மகள் இறந்து கிடந்த கொடூரக் காட்சியைப் பார்த்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற சுந்தரம் விம்மி விம்மி அழுதார்.

மனையியும் வீட்டில் இல்லாத நிலையில், அவர் சமையலறைக்குள் – மகளின் சடலத்துக்கு அருகில் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்தார்.

இரவு 8.30 மணியளவில் சுந்தரம் வீட்டுக்கு வந்த அவரின் தம்பி சரவணன், தனது அண்ணன் மற்றும் பெறாமகள் ஆகியோர் வீட்டில் இறந்து கிடக்கும் காட்சியைப் பார்த்தார். உடனே அப்பிரதேச பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். அதையடுத்து நடத்திய பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் நல்லம்மா சிக்கினார்.

நடந்த உண்மை விபரத்தை பொலிஸாருக்கு அவர் தெரிவித்தார். விசாரணைகள் தொடர்வதால் அவர் பொலிஸ் சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *