சந்திரிக்கா – வெல்கம இரகசிய சந்திப்பு! கலக்கத்தில் மைத்திரி – மஹிந்த கூட்டணி
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், குமார வெல்கம எம்.பிக்குமிடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக்கட்சியெழுப்புவது தொடர்பிலேயே இதன்போது பேசப்பட்டுள்ளதாகவும், சந்திரிக்காவின் சார்பில் அவரால் அனுப்பட்ட சிறப்பு பிரதிநிதியொருவரே சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
குமார வெல்கமவின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது என்பதை துப்பறிவு செய்யும் நோக்கிலேயே தான் நேரில் களமிறங்காது தனது பிரதிநிதியொருவரை சந்திரிக்கா அம்மையார் பேச்சுக்கு அனுப்பியுள்ளார் என கூறப்படுகின்றது.
சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை குமார வெல்கம எம்.பி. கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.