விழுந்து நொறுங்கியது ஹெலிகாப்டர் – ஐவர் பலி

நைஜீரியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியாயினர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ராணுவவீரர்களுக்கு உதவுவதற்காக நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ-35எம்’ ரக ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் விமானி உள்பட 5 பேர் இருந்தனர்.

அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *