தங்காலையில் படு பயங்கரம் – நால்வர் சுட்டுக்கொலை! ஐவர் படுகாயம்!! நத்தார் தினத்தில் வெறியாட்டம்!!!
தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு – தப்பிச்சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ரி – 56 ரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் பயன்படுத்திலே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நத்தார் பண்டிகையன்று இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தங்காலைப் பகுதியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். விசேட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.