ராஜிதவுக்கு எதிராக மைத்திரிக்கு கடிதம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சர் பதவியே வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியானதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய சங்கத்தின் 14 ஆயிரம் வைத்தியர்கள் கைச்சாத்திட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

ராஜிதவின் பதவிக் காலத்தில், வைத்தியர்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல் இடம்பெற்றது என அக்கடித்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில், ராஜித சேனாரத்னவுக்கு, சுகாதார அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *