மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு
மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை தூதரகத்தை டெல் அவிவில் இருந்து மாற்ற முடியாது எனவும் ஸ்காட் மேரிசன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் இனி மேலும் மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற விருப்பம், கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டே நடைபெறும். கிழக்கு ஜெருசலேம் குறித்து அமைதி ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் தாராளவாத ஜனநாயகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார்.