Local

சபாநாயகரின் தலையை குறிவைக்கிறது மஹிந்த அணி! – பதவி துறக்குமாறு வலியுறுத்து

இலங்கையில் அரசியல் குழப்பம் தலைவிரித்தாடுவதற்கு சபாநாயகர் கருஜயசூரியவே காரணம். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, சபாநாயகர்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார் அவர்.

” சபாநாயகரின் ஏதேச்சாதிகார செயற்பாட்டின் காரணமாகவே நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் வகையில் அவர் செயற்பட்டுள்ளார். சபாநாயகராக அன்றி ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடையவராகவே முடிவுகளை அறிவித்துவருகிறார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குரிய முழுப்பொறுப்பையும் அவர் ஏற்கவேண்டும். கௌரவமான முறையில் பதவியை துறக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக பதவிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading