Lead NewsLocal

எதேச்சாதிகாரியான மஹிந்தவை பிரதமராக்கும் முயற்சிக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதா? – மைத்திரி மீது சீறிப் பாய்கின்றார் சமந்தா

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் இலங்கையின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும் என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், “எதேச்சாதிகாரியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நிலைநிறுத்தும் முயற்சியாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் இலங்கையின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும்” – என்று சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading