விடுதலையான அமீத்துக்கு கண்டியில் பெரும் வரவேற்பு!

கண்டியில் ஏற்பட்ட கலவரத்துக்கு தூபமிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


ஒருவருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும், 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் கண்டி நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலையானவர்களுக்கு அவர்களின் ஆதரவாளர்களால பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

கண்டியிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடந்த மார்ச்மாதம் வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *