அரசின் மனித நேயம் கேள்விக்குறி! – சபையில் சுமந்திரன் எம்.பி. சீற்றம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசு தொடர்ந்தும் ஏன் இழுத்தடிப்புகளைச் செய்து வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.

இவ்வாறான செயற்பட்டால் நல்லாட்சி அரசில் மனித நேயம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காடினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நேற்றுக் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசு ஏன் இழுத்தடிப்புகளைச் செய்து வருகின்றது?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 100 க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி மாற்றுச் சட்டத்தை கொண்டுவருவதாகச் சர்வதேசத்திடம் அரசு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *