கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: மக்களை உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் மஹாவலி ஆற்றின் நுகவெல, உலப்பனை மற்றும் பொல்கொல்ல பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *