பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் இன்று போராட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம், மலையகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கமும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.
மேற்படிக் கவனயீர்ப்புப் போராட்டம், அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில், கல்முனையில் இன்று (23) நடைபெற்றது.
இதன்போது தொழிற்சங்க சங்க ஊழியர்கள் கலந்துகொண்டு, சம்பள உயர்வுக்கான தமது ஆதரவை வழங்கினர்.