இலத்திரனியல் சுகாதார அட்டைகள் நடைமுறைக்கு வரும்;
இலத்திரனியல் சுகாதார அட்டைகள் நடைமுறைக்கு வரும்;
– சுகாதார அமைச்சர் ராஜித அதிரடி அறிவிப்பு
இலங்கையர்ளின் தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் அடுத்த நான்கு மாத காலத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் அடுத்து வரும் ஒன்பது மாத காலத்திற்குள் அனைத்து அரச வைத்தியசாலைகளும் கணனி மயப்படுத்தப்படும் – என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளிலுள்ள வைத்திய உபகரணங்களின் பொறிமுறைகள் அடுத்த வருட இறுதிக்குள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.