மேலும் ஒரு வீடும் நீரில் முழ்கியது – வீதிக்கு 4 ஆவது நாளாகவும் பூட்டு!
நோர்வூட் நிவ்வெளிகம பகுதித்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால் நான்கு வீடுகள் இடிந்து வீழ்ந்த நிலையில், தற்போது மேலும் ஒரு குடியிருப்பும் இடிந்து விழுந்துள்ளது.
அப்பகுதியிலிருந்து எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன், அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதி இன்று நான்காவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது.
காசல்ரி நீர்தேக்கத்தை அண்மித்த பொகவந்தலா அட்டன் பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதித்திலேயே ஐந்து வீடுகள் இவ்வாறு மண்சரிவில் மூற்றாக சரிந்து காசல்ரி நீர்தேக்கத்தில் மூழ்கியுள்ளன.
இப்பகுதியில் தாழிறக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், வீதியும் மூடப்பட்டது.
மு.இராமச்சந்திரன்