வௌ்ளவத்தையில் பரபரப்பு! ஆணொருவரின் சடலம் மீட்பு!!
வௌ்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில், கடற்கரையோரமாக ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.