மத்திய வங்கிக்கு கப்ரால் பாராளுமன்றத்துக்கு யோசித்த ராசபக்ச!

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில் அவரின் அந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பிரதமர் அலுவலக பிரதானி யோசித்த ராஜபக்சவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் விசேட கோரிக்கையினையடுத்தே கப்ரால் தனது அமைச்சுப்பொறுப்பை இராஜினாமா செய்யவுள்ளார் . எவ்வாறாயினும் பெசிலின் வருகைக்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்த ஜெயந்த கெட்டகொடவுக்கு இந்த பதவியை வழங்கவும் ஒருதரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *