சாதனை படைத்த இரு மாணவர்களையும் நேரில் சென்று வாழ்த்திய சுமந்திரன் எம்.பி.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மனோகரன் திகழொளிபவன், சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி நவாஸ்கன் நதி ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று நேரில் சென்று வாழ்த்தினார்.

அத்துடன் அவர்ளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *