திடீரென குடும்பத்தினருடன் சிங்கப்பூர் பறந்தார் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென இன்று சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது அவரது தனிப்பட்ட பயணம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.