வீட்டில் கஞ்சா வளர்த்தவருக்கு வந்த வினை

வீட்டு வளாகத்தில் ரோஜாப் பூ, மல்லியைப் பூ என விதவிதமாக பூக்களை வளர்ப்பவர்கள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஏன்! சிலர் சிறியளவியான விவசாய உற்பத்திகளையும் செய்வதுண்டு.

ஆனால், வீட்டு வளாகத்திலேயே சட்டவிரோதமாக கஞ்சா வளர்த்தவர் பற்றி அறிவீர்களா?

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் கிங்கோரா பிரிவில் வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த நபரை மஸ்கெலிய பொலிஸார் கைதுசெய்யதுள்ளனர்.

இவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 3 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *