அரசியல் கைதிகளுக்கு ஆதரவு கோரி யாழில் நாளை மாபெரும் போராட்டம்!
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது எனவும், இப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினர்களும் ஆதரவை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.