காங்கேசன்துறையில் மனித எலும்புக்கூடு மீட்பு!

யாழ். காங்கேசன்துறைப் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறைப் பகுதியில் உள்ள ரயில் பாதையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இந்த மனித எலும்புக்கூடு மீட்கபட்டது.

மனித எலும்புக்கூடு நான்கு மாதங்களைக் கடந்ததாக இருக்கலாம் எனவும் , அது ஆணினுடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *