World

ரஷ்யா மீதான பயங்கர தாக்குதல் : பொறுப்பேற்றது ISIS அமைப்பு

ரஷ்யாவில் நேற்றையதினம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாகவும் படுகாயமடைந்தோர் 100 எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஆப்கானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ISIS-K என்ற அமைப்பு 2014 முதல் ஈரான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பரவலாக செயல்பட்டுவரும் குழுவாகும்.

ரஷ்யா மீதான பயங்கர தாக்குதல் : பொறுப்பேற்றது இஸ்லாமிய அமைப்பு | Islamic State Group Has Claimed Russia Attack

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்துவந்துள்ள ISIS-K அமைப்பு, இஸ்லாமியர்களை அடிமைகளாக நடத்துவதாக ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, மொஸ்கோ மீதான தாக்குதல் தொடர்பில் இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்ததாக வெள்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகளுடனும் உளவுத்தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீதான பயங்கர தாக்குதல் : பொறுப்பேற்றது இஸ்லாமிய அமைப்பு | Islamic State Group Has Claimed Russia Attack

அதிபர் புடின்இந்த தாக்குதல் தொடர்பில் நேரடியாக உரையாற்றவில்லை, ஆனால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading