ராமர் கோயில் திறப்பு விழாவில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுக்கு அழைப்பு

 

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல திறப்பு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. திறப்பு விழா மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இதில் கலந்துகொள்ள திரையுலகைச் சேர்ந்த பல பாரிய நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட 18 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுக்கு அழைப்பு
அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அக்‌ஷய் குமார், அனுபம் கெர், அருண் கோவில், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் இந்தித் திரையுலகில் இருந்து அழைக்கப்படுகின்றனர்.

அதேபோல், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகிய தென்னிந்திய திரையுல பிரபலங்களுக்கு அழைப்பு வந்துள்ளது.

திரையுலகைச் சேர்ந்த இதுபோன்ற பிரபலங்களை ஒருங்கிணைத்து வரும் மூத்த அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த தகவல்களின்படி, இந்தி, தெற்கு, பஞ்சாப் மற்றும் வங்காள திரையுலகில் இருந்து மொத்தம் 18 புகழ்பெற்ற திறமையாளர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டப் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் இருந்து வருபவர்களின் பெயர்களையும் வெளியிடப்படவுள்ளன.

இந்த விழாவை மறக்க முடியாததாக மாற்ற மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகிறார்கள். அந்த வரிசையில், திரைத்துறையில் இருந்து சிறப்பு பங்களிப்பு செய்தவர்களை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அழைக்கப்பட்ட பிரபலங்கள் அனைவரும் அயோத்திக்கு வருவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலிருந்து அனுப்பப்படும் அழைப்பு அட்டைகளில்., ‘நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஸ்ரீராம ஜென்மபூமியில் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருவதை அறிவீர்கள். பௌஷ், சுக்ல துவாதசி, விக்ரம் சம்வத் 2080, திங்கட்கிழமை, 22 ஜனவரி 2024, கருவறையில் ராம்லாலாவின் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்படும். பிரான் பிரதிஷ்டையைக் காணவும், வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் பெருமையை உயர்த்தவும் இந்த மங்களகரமான தருணத்தில் நீங்கள் அயோத்தியில் இருக்க வேண்டும் என்பது எங்கள் வலுவான விருப்பம்.’ என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 21-ம் திகதிக்கு முன் அயோத்திக்கு செல்ல திட்டமிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ‘அயோத்திக்கு எவ்வளவு சீக்கிரம் வருகிறீர்களோ, அவ்வளவு வசதி உங்களுக்குக் கிடைக்கும். தாமதமாக வந்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜனவரி 23, 2024க்குப் பிறகுதான் திரும்பத் திட்டமிடுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *