Local

சட்டவிரோதமான முறையில் இலண்டன் செல்லவிருந்த இலங்கையர் உயிரிழப்பு

பிரான்ஸில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலண்டன் நோக்கி பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் வேறு சில நபர்களுடன் இலண்டன் நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது படகு புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படகில் இருந்த ஏனைய நபர்கள் குறித்த இளைஞரை மீட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இளைஞர்கள் பாரியளவில் பிரான்ஸில் இருந்து இலண்டன் நோக்கி படகு மூலம் புலம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading