Local

அடுத்த ஆண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு!

அடுத்த ஆண்டுக்கான (2024) ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்த நிலையில், அறிவிக்கப்பட்டபடி குறித்த சட்டமூலம் இம்மாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த நிதியாண்டுக்குரிய (2024) அரச செலவீனம் 3,860 பில்லியன் ரூபாவாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டுடன் (2023) ஒப்பிடுகையில் 203 பில்லியன் ரூபாய் அதிகமாகும்.

அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு என்பவற்றுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த அமைச்சுகளுக்கு அடுத்த வருடம் (2024) 886 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுகளுக்கு அடுத்த வருடம் (2024) 723 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு! | 203 Billion Rs Increase Expenditure Fy 2024 Budget

மேலும், பாதுகாப்பு அமைச்சுக்கு 423 பில்லியன் ரூபா, சுகாதார அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 403.6 பில்லியன் ரூபா, கல்வி அமைச்சுக்கு 237 பில்லியன் ரூபா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 140.7 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவசாய அமைச்சுக்கு 100 பில்லியன் ரூபா, நீர்பாசன அமைச்சுக்கு 84 பில்லியன் ரூபா, அதிபர் அலுவலகத்துக்கு 6.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading