காணாமல் போன கோடீஸ்வரர் சடலமாக மீட்பு!
பத்தரமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் என்ற 50 வயதுடைய நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த இந்த வர்த்தகரின் சடலம் இன்று (02) பத்தரமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அவரது வீட்டின் குளியல் தொட்டியில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.