அபூர்வ கண்டுபிடிப்பு!
நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் (பிஎன்ஏஎஸ்) இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு பூமியில் குறைந்தது 20 குவாட்ரில்லியன் எறும்புகள் இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது 20,000,000,000,000,000 எறும்புகள் உள்ளன
ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மத்திய ஆபிரிக்கா மற்றும் ஆசியா என அனைத்துக் கண்டங்களிலும் உள்ள வெவ்வேறு வாழ்விடங்களில் உள்ள தரை மற்றும் மரத்தில் வாழும் எறும்புகள் பற்றிய தரவுகளைச் சேகரித்தது. சுமார் 489 ஆய்வுகளை ஆய்வு செய்து, இந்த மதிப்பீட்டை அறிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் அமைப்புகளில் எறும்புகள் வகிக்கும் பங்கைப் புரிந்துகொள்ளவும், காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களால் எறும்புகளும் அது சார்ந்த உயிரினங்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை மதிப்பிடுவதற்கு இந்த ஆராய்ச்சி உதவும் என்கின்றனர்.
பூமியில் உள்ள எறும்புகளின் மொத்த நிறை தோராயமாக 12 மெகா டன் உலர் கார்பனாக மதிப்பிட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பள்ளியின் பாரஸ்ட் ஃபெலோ, மார்க் வோங் கூறினார்.
பூமியில் உள்ள மொத்த எறும்புகள் எடை என்பது உண்மையில் உலகின் அனைத்து காட்டு பறவைகள் மற்றும் பாலூட்டிகளை விட அதிகமாக இருக்கும்
பூமி முழுவதும் காணப்படும் 15,700 க்கும் மேற்பட்ட பெயரிடப்பட்ட இனங்கள் மற்றும் எறும்புகளின் கிளையினங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இன்னும் விவரிக்கப்படவில்லை.
ஆய்வின்படி, துருவப் பகுதிகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து வாழ்விடங்களிலும் எறும்புகளைக் காணலாம். காடுகள் மற்றும் கிரகத்தின் வறண்ட பகுதிகளில் அதிக எறும்புகள் உள்ளன. அதே நேரத்தில் வெப்பமண்டல மண்டலங்களில் எறும்புகளின் அதிக அடர்த்தி உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
காலநிலை மாற்றம், ஆக்கிரமிப்பு இனங்கள், ஒளி மாசுபாடு, விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக 1% முதல் 2% வரையான எறும்புகளின் இழப்பை ஏற்படுத்துவதாக தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் ஜனவரி 2021 இல் வெளியிடப்பட்ட தொடர் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.