விட்டமின் மாத்திரையை விழுங்கிய 13 ஆடுகள் உயிரிழப்பு!

கேகாலை கால்நடை வைத்திய பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகள் திடீரென உயிரிழந்துள்ளன.

இந்த மாதம் 14ஆம் திகதியிலிருந்து கேகாலை பிரதேசத்திலுள்ள விலங்கு உணவு வர்த்தக நிலையமொன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விட்டமின் மருந்தொன்றை வழங்கிய பின்னரே 13ஆடுகள் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் கேகாலை- நாகொல்ல பிரதேசத்தில் திடீரென 17 ஆடுகள் உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கேகாலை பகுதிக்கு பொறுப்பான கால்நடை வைத்தியரிடம் வினவியபோது, உயிரிழந்த ஆடுகளின் உடற்பாகங்களை பேராதனை மிருக வைத்திய ஆய்வு கூடத்துக்கு அனுப்பியதாகவும், அதன் அறிக்கைக்கு அமைய பக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணி அல்லாத மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் குறித்த ஆடுகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளின் மாதிரியை பேராதனை மிருக வைத்திய ஆய்வு கூடத்துக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அறிக்கை இதுவரை எமக்கு கிடைக்கவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *