ஆளுங்கட்சியினருடன் ஜனாதிபதி அவசர மந்திராலோசனை!
ஆளுங்கட்சியின் அவசர நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மூத்த அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்கள் பலர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
மேற்படி சந்திப்புக்கு பின்னரே ஜனாதிபதியால் நேற்று விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.